இந்திய அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் நல்ல வட்டி விகிதம் வழங்கப்படுகிறது இதனால் 20 வருடத்தில் சுமார் 66 லட்சம் வரை திரும்ப பெறலாம்.
PF திட்டம்:
இன்றைக்கு பங்குச்சந்தை முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கிறது. அதே நேரம் அதில் ரிஸ்க்கும் ஏராளம். ஏனெனில் சந்தையில் பங்குகளின் மதிப்பை பொறுத்து தான் லாபம் கிடைக்கிறது. பங்குகளின் மதிப்பு சரிவை சந்தித்தால் நாம் முதலீட்டை இழக்க நேரிடும். இத்தகைய நேரத்தில் மக்கள் பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இவ்வாறு முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு அஞ்சலகத் திட்டங்கள் கை கொடுக்கும் அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தற்போது நல்ல வட்டி விகிதம் வழங்கப்படுகிறது
இத்திட்டத்தில் ரூ.500 செலுத்தி உங்களது முதலீட்டை தொடங்கலாம். இவ்வாறு செலுத்தும் போது ஒரு ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் இதனை தேவைப்பட்டால் நீங்கள் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். 15 ஆண்டுகள் என்ற கணக்கில் நீங்கள் 22,50,000 முதலீடு செய்யலாம். வட்டி மட்டும் 7.1% வட்டியில் வட்டி மட்டுமே மட்டும் ரூ.40,68, 209 கிடைக்கும். மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால் இறுதியாக ரூ.66,58,288 திரும்ப கிடைக்கும்.