மூத்த குடிமக்களுக்கான அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம் – 8% வட்டி விகிதம்!
இந்திய அஞ்சலக திட்டத்தில் உள்ள சிறப்பான மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அஞ்சலக திட்டம்:
இந்திய அஞ்சலக திட்டம் தனது முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அதிலும், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பிற்காலத்தில் உதவும் படியாக நல்ல லாபம் தரும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், ஒரு பிரபலமான மற்றும் லாபகரமான திட்டமாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் விளங்கி வருகிறது. அதாவது, ஐந்து வருட கால சேமிப்புத் திட்டமான இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுவட்டியாக 8 சதவீதம் வழங்கப்படுகிறது.
மீண்டும் அதிகரித்த மின் கட்டணம்.. மரத்தின் கீழ் அமருங்கள் – முதல்வர் அறிவுரை!
மேலும், குறைந்தபட்சமாக இந்த திட்டத்தில் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் வரைக்கும் சேமித்துக் கொள்ள இயலும். மேலும், இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் நிறைவடைந்த பிறகு மேலும் 3 ஆண்டு காலங்கள் வரைக்கும் நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். மேலும், இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் மூலமாக இந்திய வரிச் சட்டம் 1961 பிரிவின் கீழ் ரூபாய் 1.5 லட்சம் வரைக்கும் முதலீட்டாளர்கள் வருமான வரி விலக்கு பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.