8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி வழங்கும் திட்டம் – முழு விவரங்கள்!
மத்திய அரசின் தபால் துறையில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான பணி வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த அனைத்து விவரங்களும் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால்துறை வேலைவாய்ப்பு:
அஞ்சலத்தின் மூலம் பல ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் ஆண்டு தோறும் அறிவிக்கப்பட்டு தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. மற்ற நிதி நிறுவனங்களை விட அஞ்சலகத்தில் மக்கள் பயன் அடையும் வகையிலான அதிக முதலீட்டு திட்டங்கள் உள்ளது. இவற்றை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல வழிகள் பின்பற்றப்படுகின்றது. இதனால் அதிக அளவிலான மக்கள் அஞ்சலக சேவைகளை தொடர ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் அஞ்சல் அலுவலகங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – அரசுக்கு கோரிக்கை!
இதனால் மத்திய அரசு மக்கள் எளிதாக பயனடையும் வழியிலும், அதிக வேலைவாய்ப்பை உண்டாகும் வகையிலும், புதிதாக பிரான்சைஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தபால் நிலைய பிரான்சைஸ் மற்றும் தபால் நிலைய முகவர்கள் பிரான்சைஸ் என்ற இரண்டு பிரிவுகள் இதில் உள்ளது. இதனை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸ்:
போஸ்ட் ஆபீஸ் பிரான்சைஸ் தொடங்குவதற்கு, அந்த நபர் இந்திய குடிமகனாகவும், 18 வயதை அடைந்தவராகவும், 8ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவராகவும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பித்து தேர்வாகும் பட்சத்தில் தபால் துறையுடன் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு ரெஜிஸ்டர் போஸ்ட்டுக்கு ரூ.3ம், ஸ்பீட் போஸ்ட்டுக்கு ரூ.5ம், ரூ. 100 முதல் ரூ. 200 வரையில் மணி ஆர்டருக்கு ரூ. 3.50ம், ரூ. 200க்கு மேற்பட்ட மணி ஆர்டருக்கு ரூ.5 மற்றும் 1000க்கும் மேற்பட்ட புக்கிங்கள் மற்றும் ஸ்பீட் போஸ்டுகளுக்கு மாதம் 20% கூடுதல் கமிஷன் வழங்கப்படும்.
தமிழகத்தில் இளநிலை பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – தொழில் சார் வல்லுனர் தேர்வு அறிவிப்பு!
இதனுடன் போஸ்டல் ஸ்டேம்ப், அஞ்சல் எழுதுபொருட்கள், பணம் ஆர்டர் படிவம் போன்றவற்றின் விற்பனையில், 5% கமிஷன் கிடைக்கும், வருவாய் முத்திரைகள், மத்திய ஆட்சேர்ப்புக் கட்டண முத்திரைகள் போன்றவற்றின் விற்பனை மற்றும் சில்லறை சேவைகளில் அஞ்சல் துறையின் வருமானத்தில் 40% தொகை கமிஷனாக கிடைக்கும். இதற்கென இந்திய அரசின் தபால் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் விண்ணப்ப படிவத்தினை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். படிவம் கிடைத்த பிறகு, தபால் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இதன் பின்னர், விண்ணப்பம் பதிவு செய்த 14 நாட்களுக்குள் தபால் கோட்ட தலைவர் உங்கள் பிரான்சைஸை உறுதி செய்து ஒப்புதல் அளிப்பார்.