தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காய்கறி வரத்து குறைந்துள்ளது. அதனால் காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. அதனால் மக்களின் நலன் கருதி நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை செய்யுமாறு ராமதாஸ் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.
நியாயவிலை கடைகளில் தக்காளி:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த வடகிழக்கு பருவமழையானது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் அன்றாடம் வாங்கும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இளநிலை பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு – தொழில் சார் வல்லுனர் தேர்வு அறிவிப்பு!
அதாவது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறி விளைச்சல் சேதமடைந்துள்ளது. அதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. அவ்வாறு காய்கறி வரத்து குறைந்துள்ள காரணத்தால் தக்காளி மற்றும் கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் காய்கறி வாங்குவதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? புத்தாண்டு பரிசாக அறிவிப்பு?
அதனால் கொரோனா காலகட்டத்தில் நடமாடும் காய்கறி கடைகள் உருவாக்கப்பட்டதை போல இப்போதும் உருவாக்கி மலிவு விலையில் காய்கறிகளை மக்களுக்கு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தக்காளியின் விலை அதிகமாக உள்ளதால் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்து தமிழக மக்களுக்கு மலிவான விலையில் நியாயவிலை கடைகள் மூலம் வழங்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இத்தகைய கோரிக்கை மக்கள் வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.