‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து விலகும் பூவரசி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சன்டிவியின் பூவே உனக்காக சீரியலில் இருந்து பூவரசி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ராதிகா ப்ரீத்தி, சீரியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர்.
பூவே உனக்காக:
சின்னத்திரையில் முக்கிய அங்கமாக விளங்கும் சீரியல்களின் நடிகர், நடிகைகள் அனைவரும் தற்போது வெள்ளித்திரையை விட அதிக புகழையும், பிரபலத்தையும் சம்பாதித்து வருகின்றனர். இதனால் தான் வெள்ளித்திரையை சேர்ந்த பிரபலங்கள் கூட சின்னத்திரையின் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். அதேபோல், சின்னத்திரை பிரபலங்கள் சீரியல் மூலம் வெள்ளித்திரை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் ஓவியா & தர்ஷன் – ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியில் பூவே உனக்காக தொடர் வெற்றிகரமாக சென்று வருகிறது. அதில் முக்கியமாக பூவரசியாக ராதிகா ப்ரீத்தி நடித்து வருகிறார். இந்த தொடர் முற்பகல் நேரத்தில் ஒளிபரப்பான நிலையிலும் கூட அதிக அளவிலான ரசிகர்களை பெற்றுள்ளது. சமீபத்தில் தான் தொடரின் நாயகன் மாற்றம் செய்யப்பட்டு நடிகர் அஜீம் நாயகனாக நடிக்கிறார். ஆனால் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதுக்கடையை சீல் வைக்க இதுதான் காரணமா? ஷாக் ப்ரோமோ!
அதாவது பூவரசியாக நடித்து வந்த நடிகை ராதிகா ப்ரீத்தி பூவே உனக்காக தொடரில் இருந்து விலகுவதாகவும், தனக்கு இத்தனை காலங்கள் ஆதரவு அளித்து வந்த மக்களுக்கு மிகவும் நன்றி என்றும், மக்கள் இல்லையென்றால் தான் இந்த அளவு வளர்ந்திருக்க முடியாது என்றும், வேறு ப்ரொஜெக்ட்கள் மூலமாக மக்களை மீண்டும் சந்திக்க இருப்பதாகவும், கூறியுள்ளார். இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.