“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் ஓவியா & தர்ஷன் – ரசிகர்கள் உற்சாகம்!
“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியின் முதல் வாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஓவியா மற்றும் தர்சன் இந்த நிகழ்ச்சிக்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட்:
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் பிக்பாஸ் ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஜூலி, அனிதா, பாலாஜி, பாலாஜி முருகதாஸ், ஷாரிக், தாமரைச்செல்வி ஆகியோர் இருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் முதல் வாரம் முடிவடைந்துள்ளது. பிக்பாஸ் வீட்டின் தலைவராக ஷாரிக் இருக்கிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதுக்கடையை சீல் வைக்க இதுதான் காரணமா? ஷாக் ப்ரோமோ!
மேலும் போட்டியாளர்கள் பலர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் வனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் மக்களின் குறைவான வாக்குகளுடன் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஓவியா வருவார் என போட்டியாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஓவியா கடைசி நேரத்தில் வரமுடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருக்கிறது அதனால் அவர் வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோமாவில் இருந்து மீண்டு வந்த பாம்புபிடி மன்னன் ‘வாவா சுரேஷ்’ – மருத்துவர்கள் அறிக்கை!
இந்நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக ஓவியா மற்றும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரது மனதை கவர்ந்த தர்ஷன் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தர்ஷன் வனிதாவை எதிர்த்து கேள்வி கேட்டதன் மூலமாக பலரது விருப்பமான போட்டியாளராக மாறினார். அவரது எலிமினேஷன் பலரது மனதை வருத்தப்பட செய்தது. இந்நிலையில் அவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.