“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புதுக்கடையை சீல் வைக்க இதுதான் காரணமா? ஷாக் ப்ரோமோ!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், புதிய கடையை எந்த காரணமும் இல்லாமல் அலுவலர் திறக்கவிடாமல் இருக்கிறார். இந்நிலையில் அதற்கான காரணம் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. புது கடை இன்னும் 3 நாட்களில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. அதற்காக குடும்பமே சொந்தங்களுக்கு சொல்லி அழைக்கும் வேலையில் இருக்க, திடீரென ஒரு நாள் கடை சீல் வைக்கப்படுகிறது. அதற்கான காரணம் எதுவும் சரியாக தெரியாமல் இருந்த நிலையில் கதிர் ஜீவா என்ன செய்வது என தெரியாமல் இருக்கின்றனர். அலுவலக வாசலில் பல நாட்களாக காத்திருக்க ஆனால் அந்த அலுவலகர் அவர்களை மதிக்காமல் இருக்கின்றனர்.
கோமாவில் இருந்து மீண்டு வந்த பாம்புபிடி மன்னன் ‘வாவா சுரேஷ்’ – மருத்துவர்கள் அறிக்கை!
கடையை அடைத்ததற்கான சரியான காரணம் எதுவும் தெரியவில்லை. அதனால் குடும்பமே வருத்தத்தில் இருக்கிறது. கோவமாக கேள்வி கேட்டால் கடையை சீல் வைத்துவிடுவேன் என மிரட்டுகின்றனர். அதனால் என்ன செய்வது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கின்றனர். தனம் கடையை நினைத்து சரியாக சாப்பிடாமல் கவலை பட மீனாவும் அவரது அப்பாவிடம் உதவி கேட்கிறார். ஆனால் மீனாவின் அப்பா வேண்டும் என்றே உதவி செய்யாமல் இருக்கிறார்.
‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் வனிதா விஜயகுமார்? ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கண்ணன் கடையில் காசு திருடியதால் அந்த பையனை கதிர் அடிக்க, அவன் சில அடியாட்களுடன் கண்ணனை அடிக்கிறார். அதனால் கதிர் வீட்டில் எல்லாரும் சொல்வதை கேட்காமல் அவர்களை அடித்து நொறுக்கிறார். அடிவாங்கிவனின் அப்பா தான் கடையை சீல் வைத்து அலுவலர் என சொல்ல கண்ணன் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.