ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.490 மதிப்புள்ள பொங்கல் பரிசு – ஜன.10 முதல் விநியோகம்!
புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரூ.490 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்க உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பொங்கல் தொகுப்பு வழங்கும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
ஜன.10 முதல் பொங்கல் தொகுப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் வைக்க தேவையான 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தை பின்பற்றி நடக்கும் புதுச்சேரி மாநிலத்திலும் தற்போது இந்த பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 16 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!
அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் வைக்க தேவையான 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விரைவில் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு அவர்கள் அறிவித்திருந்தார். அவ்வாறு வழங்கப்பட உள்ள பொங்கல் தொகுப்பின் மதிப்பு ரூ.490 என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கிக்கொண்டிருப்பதால் பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!
பொதுமக்களின் இத்தகைய எதிர்பார்ப்பை உறுதிபடுத்தும் விதமாக புதுச்சேரி முதலமைச்சர் வரும் ஜன.10ம் தேதி முதல் பொங்கல் வைக்க தேவையான பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், வெல்லம் உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த பொங்கல் தொகுப்பை மக்கள் கொரோனா கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைபிடித்து பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து அவர் புதுச்சேரியில் பல்வேறு புதிய திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.