ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகை வங்கி கணக்கில் வரவு? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
தமிழகத்தில் 20204 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகையை வங்கி கணக்கில் வரவு வைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பரிசுத்தொகை:
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ வெல்லம் பச்சரிசி மற்றும் முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பரிசு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.
2024 ம் ஆண்டு ஹஜ் பயணம் – இந்தியாவிலிருந்து 1.75 லட்சம் பேர் தேர்வு!
வரும் ஜனவரி 14ம் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் ரூ.1000 ரொக்க தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வங்கி கணக்கில் பணம் வரவு வைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல்? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.