தமிழகத்தில் பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணம்? – முதல்வர் ஸ்டாலின் முடிவு!
தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு:
ஆண்டுதோறும் தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழும் வகையில் பொங்கல் வைக்க தேவையான உணவுப் பொருட்களுடன், ரொக்க பணத்தையும் கடந்த சில ஆண்டுகளாக வழங்கி மக்களை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டு 2023 டிசம்பர் மாத பெரு வெள்ளத்தின் காரணமாக 8 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ரூபாய் 6000 வெள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு எதிர்ப்பாராத கூடுதல் நிதி சுமை ஏற்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று காலை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக அரசுக்கு ரூபாய் 238.92 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் மக்கள் இது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசியுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் தொகுப்புடன் ரொக்க பணம் வழங்குவது குறித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.