கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாடலாம் – புதுச்சேரி அரசு அனுமதி !
கொரோனா காரணமாக 2020 முழுவதும் மக்கள் அச்சத்தோடு கடந்தனர் பல முக்கிய பிரபலங்களும் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில் மக்கள் தீரா துயரத்தில் உள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு பிறக்க சிறிது நாட்களே உள்ள நிலையில் 2021-ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து புதுசேரி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம்:
கொரோனா நோய் காரணமாக 2020-ஆண்டு முழுவதும் நோய் அச்சமாக கடந்தது. அரசு நோய் கட்டுபாட்டிற்காக ஊரடங்கு விதித்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டை சிறப்பாக வரவேற்பது குறித்து மக்கள் திட்டமிட்டு வருகின்றனர். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்த நிலையில் புதுச்சேரி அரசு, புதுச்சேரி கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
புதிதாக 2423 காவலர்கள் நியமனம்- தமிழக காவல் துறை அறிவிப்பு!
புதுச்சேரியில் நட்சத்திர விடுதிகள், நடுத்தர ஹோட்டல்கள், கடற்கரை ரிசாா்ட்கள் என 300 க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அறைகள் உள்ளன. 100 சதவீத அறைகளும் நிரம்பி விட்டன. கிறிஸ்துமஸ் புத்தாண்டு என கொண்டாட்டத்திற்கு மக்கள் பல மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருவார்கள்.
இந்நிலையில் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி கடற்கரைகளில் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது இதன்படி அடுத்த வெள்ளிக்கிழமை புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. கேளிக்கை விடுதிகளில் 200 பேர் மட்டுமே தங்க வேண்டும் எனவும் மத்திய அரசு விதித்த கொரோனா நோய் தொற்றுக்கான கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்