பாலிடெக்னிக் ஆசிரியர்கள் பணிநியமனம் வழங்க கோரிக்கை – முதல்வர் வீடு முன்பு போராட்டம்!!
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசிரியர்கள் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு முறைகேடுகள் காரணமாக பணிநியமன ஆணை வழங்கவில்லை என தமிழக முதல்வர் வீடு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆசிரியர்கள் போராட்டம்:
கடந்த ஆண்டு ஆசிரியர்கள் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடத்தப்பட்டதாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது நிரந்தர தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் முறைகேடுகளில் ஈடுபடுமால் உண்மையாக உழைத்து தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்கள் தேர்வு ரத்து குறித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முதல்வர் வீடு முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். காவல்துறையின் அவர்களை தடுத்து அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு – பல்கலைக்கழகம் அறிவிப்பு!!
அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது, “சில தனியார் மதிப்பீடு நிறுவனங்கள் செய்த தவறு காரணமாக பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், கஷ்டப்பட்டு படித்து எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடாத நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி மற்றும் கணினி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வுகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டாலும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் எங்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்