நாடு முழுவதும் கிராமங்களில் வீடு வீடாக பரிசோதனை – பிரதமர் அறிவுறுத்தல்!!
நாடு முழுவதும் கொரோனா பரவல் பெருகி வரும் சூழலில், கிராமப்புறங்களிலும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தும் படி மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலை தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு நாளைக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். தவிர பலி எண்ணிக்கையும் தினசரி 4 ஆயிரம் வரை ஏற்படுகிறது. இதற்கு முன்னதாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாது எனவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்தும் மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி வந்தார். மேலும் மத்திய அரசின் ஆலோசனையின் படி, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமடைந்து வந்தது.
மேலும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு? மாநில அரசு முடிவு!!
இருந்தாலும் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்ததால், மாநிலங்கள் தோறும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த ஆண்டு நோய் தொற்று ஏற்பட்டபோது, கொரோனா பரிசோதனைகள் அதிகளவு மேற்கொள்ளப்பட்டதால், முடிந்த அளவு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு வந்தது. அதற்கு மாறாக இந்த 2 ஆம் அலையின் போது, கொரோனா பரிசோதனை செய்யும் அளவு குறைந்துள்ளதாகவும், தொற்றுகள் அதிகரித்து வருவதாகவும் பல மருத்துவ நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்திய கிராமப்புறங்களை பொருத்தளவு, கொரோனா குறித்த முழுமையான விழிப்புணர்வு இன்னும் கிடைக்கவில்லை என்பது மெய்யான கூற்றாகும். இந்த நிலையில் மாநிலங்கள் தோறும் உள்ள கிராமப்புற பகுதிகளில், வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் கிராமப்புறங்களில் ஆக்சிஜன் விநியோகம் தடையில்லாமல் கிடைப்பதை உறுதிபடுத்திக்கொள்வது கட்டாயம் எனவும் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.