மேலும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு? மாநில அரசு முடிவு!!
ஒடிசா மாநிலத்தில் தினமும் 1000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து வருவதால் அங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கினை நீட்டிப்பது குறித்து இன்று தலைமை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார்.
கொரோனா பரவல்:
இந்தியாவில் நாள் ஒன்றிற்கு 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிப்படைகின்றனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகம் முழுவதும் மே 24க்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசுக்கு கோரிக்கை!!
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் அதிகமான தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் தற்போது பின்பற்றி வரும் ஊரடங்கு உத்தரவினை நீடிப்பது குறித்து அங்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது குறித்து அந்த மாநிலத்தின் தலைமை செயலாளர் சுரேஷ் சந்திர மொஹபத்ரா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 1 ஆம் தேதி முதல் அங்கு முழு ஊரடங்கு பின்பற்றபட்டு வருகின்றது.
TN Job “FB Group” Join Now
கடந்த 13 நாட்களில் மட்டும் 14 ஆயிரம் பேர் கொரோனா தாக்கத்தினால் பாதிப்படைந்து வந்ததால், அங்கு இரண்டு வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேலும் 2 வாரங்களுக்கு முழு நீட்டிக்கப்படும் என்று அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.