8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை – கொரோனா பரவல்!
இந்தியாவில் அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். பெருந்தொற்று குறைய தொடங்கியுள்ளது. அதனால் மாநில அரசுகளுக்கு சில அறிவுரைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
கொரோனா வைரஸ் கடந்த வருடம் முதல் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மாநில அரசுகள் நோய் பரவல் விகிதத்தை கருத்திற்கொண்டு கட்டுப்பாடுகளையும் ஊரடங்குகளையும் அறிவித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியது. அதன்படி மாநிலங்கள் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியது. அவ்வபோது பிரதமர் மோடி அவர்கள் காணொளி மூலம் மாநில முதல்வர்களுடன் உரையாடி மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரங்களை கேட்டறிந்து அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் தடுப்பு முறைகளையும் கூறினார்.
தனியார் பள்ளிகளில் 40% கல்வி கட்டண வசூல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
மேலும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளி விட்டு மன்கிபாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் நாட்டு மக்களுடன் காணொளி மூலம் உரையாடினார். நாட்டின் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்தும் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளையும் மக்களுக்கு தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் மாநில முதல்வர்களுடானா கலந்தாலோசனைக்கு பிறகு புதிய அறிவிப்புகள் மக்களுக்கு அறிவிக்கப்படும். தற்போது கொரோனா பரவல் அரசின் முயற்சியாலும் , மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையில் தளர்வுகள் அளிப்பது பற்றியும். மூன்றாம் அலையை தடுக்க செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு அடுத்தடுத்த மாநிலங்களுடன் பிரதமர் உரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது.