நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!!
கொரோனா தொற்றின் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் முக்கிய மருத்துவகளுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
கலந்துரையாடல்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்றின் பரவல் குறைந்தபாடில்லை. இதனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட்டு வருகின்றது.
TN Job “FB Group” Join Now
பல மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கான அடிப்படை மருத்துவ பொருட்களுக்கு கூட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல நோயாளிகள் உயிரிழந்து வரும் சம்பவங்களும் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி அவர்கள் அவ்வப்போது ஒவ்வொரு மாநிலத்தின் நிலைமை குறித்தும் அம்மாநில முதல்வர்கள், மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முக்கிய துறை அதிகாரிகளிடம் காணொளி வாயிலாக கலந்துரையாடலில் ஆலோசித்து வருகிறார்.
தமிழகத்தில் முதியோருக்கான கட்டணமில்லா சேவை எண் அறிமுகம்!!
தற்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுடன் அவர்களின் கற்றல் மற்றும் பரிந்துரைகள் குறித்து காணொளியில் உரையாடுகிறார். நாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.