நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை!

0
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை!
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை!
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று தினசரி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை காலை 9 மணிக்கு மாநில முதலமைச்சர்களுடன் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

முழு ஊரடங்கு?

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தொடக்கத்தில் கடுமையாக பின்பற்ற விதிகளில் நோய் பாதிப்பு குறைந்ததால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்பு சிறிதளவு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து அனைத்து துறைகளும் முழுவீச்சில் செயல்பட தொடங்கின. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமெடுக்க தொடங்கி உள்ளது.

50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி – 7வது ஊதியக்குழு!!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் கட்டுப்பாடுகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுவதால், நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

அதுமட்டுமின்றி வருகிற மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் குறித்து பிரதமர் மோடி அவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உரையாற்றிய பிரதமர் அவர்கள், கொரோனாவிற்கு எதிரான போரில் முழு ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமே என தெரிவித்தார்.

நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு – தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!!!

இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் கொரோனா அதிகம் பாதித்துள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நாளை காலை 9 மணி அளவில் காணொளிக்காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, ஆக்சிஜன் தேவை, தடுப்பூசி விநியோகம் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!