ஜூலை 16ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை – கொரோனா தடுப்பு!
இந்தியாவில் வரும் ஜூலை 16ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவர்கள் கொரோனா பரவல் சூழல் குறித்து காணொலி மூலம் கலந்தாலோசிக்கவுள்ளார்.
பிரதமர் ஆலோசனை:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நோய்த்தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகிறது. சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்க மாநில அரசுகள் முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மாநிலம் தோறும் கொரோனா தடுப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தி நோயாளிகளை எளிதாக கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
அதன் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால் தற்போது தொற்று பாதிப்புகள் குறைந்து வருகிறது. மேலும் பிரதமர் அவர்கள் அவ்வப்போது காணொளி மூலம் மக்களுடனும், மாநில முதல்வர்களுடனும் உரையாற்றி வருகிறார். அதில் மாநில முதல்வர்களுக்கு நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு வருகிறார். நேற்று இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் போன்ற 10 மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து தற்போது வரும் ஜூலை 16ம் தேதி தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தடுப்பூசிகள் வழங்க கோரி முதல்வர்கள், பிரதமரிடம் கோரிக்கை வைப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.