ஜன.25ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

0
ஜன.25ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் அறிவிப்பு!
ஜன.25ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் அறிவிப்பு!
ஜன.25ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

உலகின் பல்வேறு நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா பெருத்தொற்று பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறது. அந்த வகையில் உருமாறிய கொரோனா வகையாக கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு:

சீனாவில் வுஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று சீனாவை தொடர்ந்து சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டாலும் பல்வேறு அவதாரங்களை எடுத்து தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இதுவரை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற உருமாறிய கொரோனா தொற்றுகளை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்ற புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது.

தமிழகத்தில் வார நாட்களிலும் அமலுக்கு வர இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அரசின் முக்கிய முடிவு!

இந்த ஓமைக்ரான் தொற்று முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவை தொடர்ந்து தற்போது ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெதர்லாந்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டு ஜன.14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – மீண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்!

இத்தகைய முழு ஊரடங்கை அந்நாட்டு மக்கள் எதிர்த்து வந்த நிலையில் தற்போது அந்நாட்டு பிரதமர் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி உடற்பயிற்சிக் கூடங்கள், கடைகள், சலூன்கள் போன்றவை மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்கள், உணவகங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மற்றும் கலாச்சார இடங்கள் வரும் ஜன.25ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!