PhonePe பயனாளர்கள் கவனத்திற்கு…இனி மற்ற நாடுகளிலும் UPI பயன்படுத்தலாம் – புதிய அம்சம் அறிமுகம்!
நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் தளங்களில் ஒன்றான PhonePe செயலியை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தனது பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
PhonePe:
நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பெரும்பாலான பணப்பரிமாற்றங்கள் ஆன்லைன் வாயிலாக செய்யப்படுகிறது. அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் தளங்களில் ஒன்றான PhonePe செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தனது பயனாளர்களுக்கு PhonePe நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த அறிவிப்பில், தற்போது PhonePe மூலமாக UPI-ஐ பயன்படுத்தி சர்வதேச கட்டணங்களைச் செலுத்தி கொள்வதற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), சிங்கப்பூர், பூட்டான் மொரீஷியஸ், நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் வணிகர்களுக்கு QR குறியீட்டை Scan செய்து UPI வாயிலாக பணம் செலுத்தி கொள்ளலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய வங்கிகளைப் பயன்படுத்தி பணபரிமாற்றம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெறுநருக்கு அவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளூர் பணத்தின் படி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இந்த புதிய அம்சம் மூலமாக சர்வதேச கிரெடிட், டெபிட் கார்டுகளின் தேவை குறையும்.