ஈட்டிய விடுப்பு: அரசு அல்லாத ஊழியர்களுக்கு விடுப்பு பணத்திற்கான வரி விலக்கு உயர்வு – வெளியான சூப்பர் அறிவிப்பு!
தற்போது அரசு அல்லாத ஊழியர்கள் விடுமுறை நாட்களை பணமாக மாற்றி கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் பட்ஜெட்டில் அரசு அல்லாத ஊழியர்களுக்கு விடுப்பு பணத்திற்கான வரி விலக்கு உயர்வு தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஈட்டிய விடுப்பு:
தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இன்றி வழங்கப்படும். இதனை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
சிரியாவில் பயங்கரமான நிலநடுக்கம் – ஏராளமானோர் பாதிப்பு.. மருந்து பொருட்களை அனுப்பும் இந்தியா!
இந்தியாவின் தொழிலாளர் சட்டத்தின்படி, ஊழியர்களுக்கு விடுமுறை தினங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும் விடுமுறை எடுக்காத பட்சத்தில் அந்த விடுமுறை தினத்தை பணமாக மாற்றி கொள்ளலாம். அத்துடன் ஒரு ஊழியர் ஓய்வுபெறும் போது அல்லது ராஜினாமா செய்யும் போது பயன்படுத்தப்படாத விடுமுறை தினத்திற்கான பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி தற்போது அரசு அல்லாத ஊழியர்களும் ஈட்டிய விடுப்பை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1ம் தேதி அன்று வெளியிட்டார். இதில் புதிய விடுப்பு பண விலக்குகள் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், அரசு அல்லாத சம்பளம் பெறும் ஊழியர்களின் ஓய்வுக்கான விடுப்பு பணத்திற்கான வரி விலக்கு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்துவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.