தமிழக அரசு பள்ளிகளில் கூடுதல் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் – முக்கிய தகவல்!

0
தமிழக அரசு பள்ளிகளில் கூடுதல் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் - முக்கிய தகவல்!
தமிழக அரசு பள்ளிகளில் கூடுதல் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் - முக்கிய தகவல்!
தமிழக அரசு பள்ளிகளில் கூடுதல் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் – முக்கிய தகவல்!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணி:

தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் அதாவது இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – நேரடி வகுப்புகளுக்கு தடை விதிப்பு!

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் நியமனம் செய்வது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 1,575 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான பாடவாரியாக பள்ளிகளின் பட்டியல்கள் பள்ளி கல்வி இயக்குனர் அவர்களால் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ஜனவரி 8 முதல் 16ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து அவ்வாறு அனுப்பப்பட்டுள்ள பள்ளிகளுக்கு அந்த முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டியலை அனுப்பி பள்ளிகளின் அளவைப் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு அந்த குறிப்பிட்ட பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் தேவைதானா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த அரசாணையை அனைத்து மாவட்ட கருவூல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!