Post Office இல் ரூ.50 முதலீடு செய்தால் ரூ.35 லட்சம் ரிட்டன்ஸ் – அருமையான திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இந்த சேமிப்பு திட்டங்களில் குறைந்த முதலீடு செய்வதன் மூலமாக அதிக லாபங்களை பெற முடிகிறது. தற்போது அஞ்சல் சேமிப்பு திட்டத்தில் உள்ள சிறப்பான திட்டம் ஒன்றை விரிவாக பார்க்கலாம்.
Gram Suraksha திட்டம்
கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வந்தனர். இதனால் தங்களுக்கென்று பாதுகாப்பான சேமிப்பை வைக்க தொடங்கினர். பெரும்பாலும் பொதுமக்கள் அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்ய ஆரம்பித்தனர். ஏனெனில் இந்த சேமிப்பு திட்டத்தின் மூலமாக அதிக வட்டி தொகையை பெற முடியும். இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த சேமிப்பு திட்டத்தில் Gram Suraksha திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசு பள்ளிகளில் கூடுதல் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் – முக்கிய தகவல்!
இத்திட்டம் அதிகமான லாபத்தையும் குறைந்த ஆபத்தையும் பெற்றிருப்பதால் நடுத்தர மக்கள் மத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதில் 19 வயது முதல் 55 வயது வரையிலானவர்கள் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் sum insured அளவு ரூ.10000 முதல் அதிகபட்சமாக 10 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதனால் தேவைக்கேற்ப இத்திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். அத்துடன் மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஒரு ஆண்டுக்கு என்று பிரீமியம் தொகையை செலுத்தி கொள்ளலாம்.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை – நேரடி வகுப்புகளுக்கு தடை விதிப்பு!
இந்நிலையில் 19 வயதுள்ளவர்கள் ரூ.10 லட்சம் என்ற sum insured அளவீட்டை தேர்வு செய்தால் 55 வயது வரை மாதந்தோறும் ரூ.1515 செலுத்த வேண்டும். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ.50.5 வரை செலுத்த வேண்டும். அதன்படி 55 வயது முடியும்போது ரூ.31.60 லட்சம் கிடைக்கிறது. இதனை இன்னும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டால் 60 வயது முடிவில் ரூ.34.60 லட்சம் பெற முடியும். மேலும் இத்திட்டம் சிறு முதலீட்டாளருக்கு அதிகளவு பலன் தரக்கூடிய திட்டமாக விளங்குகிறது. ஆதலால் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் அதிகளவு இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.