இந்தியாவில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு பலருக்கும் திடீரென முடங்கி இருக்கும். உங்களது பணத்தை எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். இதற்கான காரணம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.
PF கணக்கு:
இந்தியாவில் ஒவ்வொரு ஊழியருக்கும் வருங்கால நிதி அமைச்சகத்தில் கணக்கு தொடங்கப்படுகிறது. இதன் வாயிலாக ஊழியர்கள் பணி ஓய்வுக்குப் பிறகு குறிப்பிட்ட தொகையை பெறுவார்கள். பலரும் ஓய்வு காலத்திற்கு பிறகு PF கணக்கில் உள்ள தொகையை எடுக்க முயற்சிப்பார். இத்தகைய நேரத்தில் கணக்கு முடக்கப்பட்டு இருக்கும் அதற்கான முக்கிய காரணம் 36 மாதங்களுக்கு எந்த பண பரிவர்த்தனையும் மேற்கொள்ளாமல் இருப்பது தான். இப்படி இருக்கும் பட்சத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கு தானாகவே முடக்கப்படும்.
இந்த நேரத்தில் கணக்குதாரர்கள் KYC மூலமாக கணக்கை புதுப்பித்து உங்களது தொகையை வட்டியுடன் பெறலாம். இதில் 50,000 மேற்பட்ட தொகையை எடுப்பதற்கு வைப்பு நிதி ஆணையரின் ஒப்புதல் அவசியம். இதே 25,000-க்கு உட்பட்ட தொகையை பெற கணக்கு அதிகாரி ஒப்புதல் அளிக்க முடியும்.