தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 22 உயரும் – அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
தமிழகத்தில் பெட்ரோலின் விலை படிப்படியாக லிட்டருக்கு ரூபாய் 22 உயரும் என்றும், மேலும் டீசலின் விலையை பொறுத்த வகையில் இதுவும் அது போலவே லிட்டருக்கு ரூபாய் 22 உயர இருப்பதாக பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் விலை:
நாட்டில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் இருந்து மே மாதம் வரை முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மேலும் அதன் காரணமாக வாகன போக்குவரத்து தடைபட்டதாலும், கச்சா எண்ணெய் விலை கீழ்மட்டத்தில் சென்றதாலும் பெட்ரோல், டீசல் விலையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் நடுநிலையில் இருந்து வந்தது. ஆனால் ஊரடங்கு தளர்வுகள் வெளியானதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை படிப்படியாக ஏற்றம் கண்டது. மேலும் மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளால் பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே செல்கிறது.
ஏப்ரல் 13 திரைக்கு வரும் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ – அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். மேலும் தினந்தோறும் எவ்வாறு வாகனத்திற்கு பெட்ரோல் போடுவது என்று சிக்கலில் தவித்து வருகின்றனர். ஆனாலும் வெளியே சென்று தான் ஆக வேண்டும் என்பதால் பெட்ரோல் மற்றும் டீசலை தினமும் செலுத்தி விட்டு தான் செல்கின்றனர். இப்படி பெட்ரோலின் விலை அதிகமானாலும் வாகன ஓட்டிகள் வேறு வலி இல்லாமல் அதை போட்டு விட்டு தான் வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பெட்ரோலிய வணிகர் சங்கம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது. அது என்னவென்றால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.22 என்று படிப்படியாக தொடர்ந்து உயரும் என்றும், மொத்தமாக விற்பனை செய்யப்படும் இடங்களில் டீசல் விலையும் லிட்டருக்கு படிப்படியாக ரூபாய் 22 உயர்ந்த நிலையிலும் சில்லறை வியாபாரத்தில் விலை உயர்த்தப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்த தகவல் கூறுகிறது.