பெட்ரோல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.12 காசுகள் சரிவு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விலை குறைப்பு:
நாடு முழுவதும் மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான பெட்ரோல் டீசல் ஆகியவை மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதத்திற்கு இரு முறை பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும். சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த முறை தான் சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது. அதன் பின்னர் தினசரி பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. மேலும் இந்த விலை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் அதிரடி மாற்றம் ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து விலை ஏற்றம் காரணமாக பொதுமக்கள் சிரமத்தில் இருந்தனர். பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் அடைவதால் மக்கள் கவலையில் உள்ளனர். தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலையால் மற்ற பொருள்கள் விலைவாசியும் உயர்ந்துக் கொண்டு வருகிறது.
நாட்டின் ஜிடிபி 20.1% அதிகரிப்பு – முன்னேற்ற பாதையில் இந்திய பொருளாதாரம்!
இந்நிலையில் சென்னையில் இன்று நிலவரப்படி பெட்ரோல் டீசல் விலைகுறைந்துள்ளது. அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 12 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.99.08ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 14 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.93.38 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதியில் உள்ளனர்.