தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூபாய் 25 உயர்ந்துள்ளது. அதன் படி ரூ.877க்கு விற்கப்பட்ட சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ.900.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமையல் எரிவாயு விலை:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இந்த விலையேற்றம் காரணமாகவும் மக்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.
நாட்டின் ஜிடிபி 20.1% அதிகரிப்பு – முன்னேற்ற பாதையில் இந்திய பொருளாதாரம்!
இந்நிலையில் சமையல் எரிவாயு விலை கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி அதிரடியாக உயர்த்தப்பட்டு ரூ,877க்கு விற்பனை செய்யப்பட்டது. 2 மாதங்களில் ரூ50 விலை உயர்வு அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் படி சென்னையில் சிலிண்டர் விலை ரூ.900.50 என விற்கப்படுகிறது.
அதன் படி கடந்த 9 மாதங்களில் நாட்டில் சமையல் எரிவாயு விலை 285 ருபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1831.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வர தொடங்கியது. மேலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதத்திற்கு இருமுறை அல்லது சில நேரங்களில் மாதம் 3 முறை கூட விலை ஏற்றம் அறிவிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.