இரவு 9 மணிவரை உணவகங்கள் திறக்க அனுமதி – அரசுக்கு கோரிக்கை!
புதுச்சேரியில் உணவகங்களை இரவு 9 மணி வரை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என காரைக்கால் உணவக உரிமையாளர்கள் புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசுக்கு கோரிக்கை:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளது. நோய் பரவலை தடுக்க புதுச்சேரி அரசு முதல் கட்ட நடவடிக்கையாக கடந்த மாதம் ஏப்ரல் முதல் ஊரடங்கை அமல்ப்படுத்தியது. முதலில் வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது. மேலும் தொற்று அதிகரித்ததால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
தமிழக காவல்துறை முக்கிய அறிவிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் புதுச்சேரி முதல்வர் ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறார். அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அலுவலகங்கள் இயங்கவும் புதுச்சேரி அரசு அனுமதித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து காரைக்கால் உணவக உரிமையாளர்கள் உணவகங்கள் செயல்படும் நேரத்தை மேலும் அதிகரித்து இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். ஊரடங்கால் உணவக தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி நிலையில் உள்ளனர். எனவே வரும் 21ம் தேதிக்கு பிறகு உணவகங்களை இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் உணவகங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவோம் எனவும் உறுதியளித்துள்ளனர்.