ஜூன் 8க்கு பின் மாவட்டங்களிடையே போக்குவரத்துக்கு அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது சற்று குறைந்து வருவதால், இன்று (ஜூன் 2) முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
நாடு முழுவதும் கொரோனா தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு உத்தரவில் இருந்து சில தளர்வுகளை அறிவிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவின் படி, மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள இடங்களில், இன்று (ஜூன் 2) முதல் சில வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
தவிர மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு, ஐசியு மற்றும் வென்டிலேட்டர்களின் பயன்பாடுகள் 60 சதவீதத்திற்கும் குறைவாக உபயோகத்தில் உள்ளது என முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜூன் 7 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில், 25 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தவிர மாவட்டங்கள் தோறும் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை 10,000 ஆக குறையும் வரையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பகல் முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவு விதிக்க மாநில அரசு அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர,
CBSE பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீடு – மாணவர்கள் குழப்பம்!!
- பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
- தனியார் அலுவலகங்கள் 25 சதவீதம் ஊழியர்களுடன் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தனியார் வாகனங்கள் மாவட்டங்களுக்குள் செல்ல அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இந்தியாவில் தினசரி 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி – ICMR திட்டம்!
- அதன்படி ஜூன் 8 ஆம் தேதிக்கு பிறகு, மாநிலம் முழுவதும் அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படும்.
- சமூக மற்றும் அரசியல் கூட்டங்கள் தொடர்ந்து தடைசெய்யப்பட்டிருக்கும்.
- விளையாட்டு, கல்வி, கலாச்சார மற்றும் மத செயல்பாடுகள், திருவிழாக்கள், சந்தைகள் ஆகியவை அடுத்த அறிவிப்பு வரும் வரை தடைசெய்யப்பட்டிருக்கும்.
- சினிமா அரங்குகள், ஆடிட்டோரியங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொது பூங்காக்கள் திறக்க அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
EMI stop pannuga sir 6mouthu iku people eavlu kadan problem saguraga