CBSE பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீடு – மாணவர்கள் குழப்பம்!!

1
CBSE பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீடு - மாணவர்கள் குழப்பம்!!
CBSE பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீடு - மாணவர்கள் குழப்பம்!!
CBSE பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீடு – மாணவர்கள் குழப்பம்!!

நாட்டில் கொரோனாவின் வீரியம் அதிகமாக காணப்பட்டு வரும் காரணத்தினால் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று (ஜூன் 1) அறிவித்தது. இதனை தொடர்ந்து மதிப்பெண் கணக்கிடுவது எவ்வாறு என்பது குறித்த குழப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு:

இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாத காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு கொரோனா நோய்பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான இறுதி முடிவு குறித்து நேற்று (ஜூன் 1) பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

TN Job “FB  Group” Join Now

இந்த கூட்டத்தின் முடிவில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு தற்போது மதிப்பெண்கள் தேவைப்பட்டு வருகிறது. மதிப்பெண் கணக்கீடு குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிபிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்சிஇ பள்ளி 12ம் வகுப்பு மாணவர்களின் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு செயல்திறன் தரவுகளை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் நீட், ஜேஇஇ தேர்வுகள்? கல்வி நிபுணர்கள் விளக்கம்!!

இதனை தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பெண்கள் வகுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. மேலும் 10ம் வகுப்பு தேர்ச்சி மதிப்பீட்டிற்கு ஒத்ததாக இருக்கும் அளவுகோல்களை 12ம் வகுப்பு தேர்ச்சி மதிப்பீட்டிற்கும் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடையும் மாணவர்களுக்கு தேர்வுகளை எழுதும் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். அந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தினசரி 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி – ICMR திட்டம்!

மேலும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொழுது மதிப்பெண் கணக்கீடு குறித்து தெரிவிக்கப்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீடு அறிவிப்பு குறித்தே மாநில வாரிய அளவிலான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!