இந்தியாவில் தினசரி 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி – ICMR திட்டம்!
இந்தியாவில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
கொரோனா 2 ஆம் அலையை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதம் பாதியிலிருந்து அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து தினசரி 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் அளவுக்கு தடுப்பு மருந்துகள் கையிருப்பில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் நீட், ஜேஇஇ தேர்வுகள்? கல்வி நிபுணர்கள் விளக்கம்!!
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ICMR தலைவர் பல்ராம் பார்கவா கூறுகையில், இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதுவரை அமெரிக்காவில் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்கள் அளவுக்கு இதுவரை நம் நாட்டிலும் போடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில், தினமும் 1 கோடி பேருக்கு தடுப்பூசி போடும் அளவுக்கு மருந்துகள் கையிருப்பில் இருக்கும் என கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியாவில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். அதாவது 4 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த தினசரி பாதிப்பானது தற்போது ஒன்றரை லட்சத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.