இன்று முதல் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!!
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தால் மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 9) முதல் விரைவு பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து:
கேரளாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்திற்கு குறைவாக காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஜூன் 16ம் தேதி வரை நீட்டித்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகள் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அரசு, தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி – இரவு நேர ஊரடங்கு அமல்!
மற்ற நாட்களில் அத்தியாவசிய கடைகள், நகை விற்பனை, காலனி விற்பனை போன்ற கடைகள் அனைத்தும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. தற்போது இதனை தொடர்ந்து புதிய தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி கேரள மாநிலத்தில் இன்று (ஜூன் 9) முதல் பேருந்து போக்குவரத்து இயங்கும் என்று மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போது இதற்கான அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில் கூறியதாவது, கேரள மாநிலத்தில் நீண்ட நாட்களுக்கு பின்பு பேருந்து போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நீண்ட தூர பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் விரைவில் அனைத்து பகுதிகளுக்கான பேருந்து சேவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் நீண்ட தூர போக்குவரத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு மேற்கொள்ளலாம் என்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.