தமிழகத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் பொதுமக்களுக்கு நேரடியாக வீட்டிலேயே மருத்துவம் அளிக்கும் புதிய திட்டம் தொடங்க இருப்பதாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுக தலைமையிலான அரசு பல நலத்திட்டங்கள், சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி உள்ளதோடு பல அதிரடி மாற்றங்களையும் செய்து வருகிறது. தமிழக முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் மூலம் கண்காணித்து வருகிறார். தமிழக மக்களுக்கு பலனளிக்கும் பல திட்டங்களையும் விரைவில் அமல்படுத்துவதற்கு அரசு ஆலோசித்து வருகிறது.
ஜூலை 26 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – கர்நாடகா அரசு அறிவிப்பு!
அமைச்சர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் தங்களது துறை சார்ந்த ஆய்வுகளை நேரில் சென்று மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் காந்தி அவர்களும் சென்றுள்ளார். அங்கு மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு, தேவையான வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
TN Job “FB Group” Join Now
பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த கொதிப்பு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலமாக வீடுகளுக்கு நேரடி சென்று சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடி பேர் பலனடைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.