ஜூலை 26 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு – கர்நாடகா அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் ஜூலை 26 ஆம் தேதியில் இருந்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் துவங்குவதால், குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது குறைந்து கொண்டே வருவதால் கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஜூலை 26 முதல் மீண்டும் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக துணை முதல்வர் டாக்டர் சி.என் அஸ்வத் நாராயண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள இளங்கலை, முதுகலை மற்றும் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் உட்பட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஜூலை 26 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும்.
தமிழக ரேஷன் கடைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்த கல்வி நிறுவனங்களில் கொரோனா வழிகாட்டுதல்களின்படி நேரடி வகுப்புகளை மீண்டும் துவங்குவது குறித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட அனைவரும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்திருக்க வேண்டியது கட்டாயம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை எடுக்கும் முன்னதாக, மாநில துணை முதல்வர், உயர் கல்வித்துறை, சுகாதார நிபுணர்களிடம் ஆலோசித்ததாக தெரிவித்துள்ளார். மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களில் 74% பேர் தடுப்பூசி போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை பெற்றிருக்க வேண்டும் எனவும் அதே நேரத்தில் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களையும் முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து வகுப்பறைகளில் மாணவர்கள் முகக்கவசங்களை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.