தமிழக கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்.. தேர்வுக்குழு அமைப்பு – அறநிலையத்துறை உத்தரவு!

0
தமிழக கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்.. தேர்வுக்குழு அமைப்பு - அறநிலையத்துறை உத்தரவு!
தமிழக கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்.. தேர்வுக்குழு அமைப்பு - அறநிலையத்துறை உத்தரவு!
தமிழக கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்.. தேர்வுக்குழு அமைப்பு – அறநிலையத்துறை உத்தரவு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக கிராம கோயில் பூசாரிகள் அரசிடம் ஓய்வூதியத்தொகை பெற விண்ணப்பித்து இருக்கின்றனர். இது குறித்த முக்கிய உத்தரவை அறநிலையத்துறை தற்போது பிறப்பித்துள்ளது.

ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் கடந்த வருடம் ஆட்சி பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. தற்போது ஆட்சிக்கு வந்து ஓராண்டிற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரவில்லை. இது குறித்து கேள்வி எழுப்பி, அரசு ஊழியர் சங்க அமைப்பினர் பல முறை போராட்டங்களை நடத்தினர். வாக்குறுதி அளித்தபடி ஊழியர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் பெற விண்ணப்பித்து உள்ளனர். இதனையடுத்து விண்ணப்பங்களை பரிசீலித்து அதனை பரிந்துரை செய்ய அறநிலையத்துறை தேர்வு குழுவை அமைத்துள்ளது. இது குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு அரசு சார்பாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 1000 ரூபாயாக வழங்கபட்டு வந்த ஓய்வூதியம் தற்போது அதிகரிக்கப்பட்டு 4000 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து வெளியான முக்கிய தகவல் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் ஓய்வூதிய திட்டத்திற்கு விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய குழு அமைத்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த குழுவின் செயல் அலுவலராக, சேலம் மாவட்டம் கோயில் பூசாரி நலச்சங்க தலைவர் வாசு மற்றும் இரண்டு உறுப்பினர்கள் செயல்படுவார்கள் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புபவர்கள் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்திருத்தல் வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!