“பாவம் கணேசன்” சீரியல் விலாஷினியின் மோசமான திருமண வாழ்க்கை – விவாகரத்து டூ வெற்றிக்கதை!
விஜய் டிவியில் ஒளிபரப்பான “பாவம் கணேசன்” சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ராவாக நடிப்பவர் தான் நடிகை விலாஷினி. இவர் தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த கொடுமைகளில் இருந்து எப்படி மீண்டு வந்தார் என மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகை விலாஷினி
தமிழ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மக்களிடம் பிரபலமாக இருக்கின்றனர். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் கதையுடன் பொருந்தி இருப்பதால் அவர்கள் சுலபலமாக மக்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவி பாவம் கணேசன் சீரியலில் கணேசனின் மூத்த அக்கா சித்ராவாக நடிகை விலாஷினி நடித்து வருகிறார். இவர் ஆர்ஜே, விஜே, டப்பிங் கலைஞர் மற்றும் நடிகை என பல திறமைகளை கொண்டவர்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் வனிதா, ஜூலி & அனிதா? ரசிகர்கள் உற்சாகம்!
அந்த சீரியலில் அவர் கணவர் வீட்டில் பல கொடுமைகளை அனுபவிக்கிறார். அம்மாவிடம் பேச வேண்டும் என்றால் கூட அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலைமையில் இருக்கும் பெண்ணாக நடித்து வருகிறார். ஆனால் அவருக்கு நிஜ வாழ்க்கையிலும் இதே போல நடந்துள்ளதாம். இது குறித்து அவர் கூறுகையில், இந்த சீரியலில் வரும் கணவரை விட எனது நிஜ வாழ்வில் கணவர் மிகவும் மோசனமானவர் அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னை ஏமாற்றி விட்டார். இதனால் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து வரப்போகும் புதிய ட்விஸ்ட் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினர் ஆவார். அதனால் இவரும் நன்றாக பாடுவாராம். சினிமாவில் பாட வேண்டும் என பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்து பின் பிரியாணி படத்தில் ஒரு பாடலில் சில வரிகளை பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்ததாம். அதன் பின் பாடல் பாட வாய்ப்பு கிடைக்காததால் ரோடியோவில் ஆர்ஜேவாக பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகு ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். அவர் கருப்பாக இருப்பதால் பல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையாம். பின் ஒரு நண்பர் மூலமாக விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.