மாணவர்களுக்கான பரிக்ஷா பே சர்ச்சா கலந்துரையாடல் – டிச.30 வரை பதிவு செய்ய கால அவகாசம் !
இந்தியாவில் பிரதமர் மோடி அவர்கள் ஆண்டுதோறும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற பெயரில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் நடப்பாண்டு கலந்துரையாடல் நிகழ்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
கலந்துரையாடல்
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மாணவர்களுக்கு தரமான கல்வியை அளிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமீப காலமாக மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் ஒரு பகுதியாக தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் மருத்துவ படிப்பிற்கான பாட புத்தகங்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அதனைத் தொடர்ந்து நடுநிலை பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு(NCF) என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாட உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் பரிக்ஷா பே சர்ச்சா என்ற பெயரில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
திருவண்ணாமலைக்கு ‘இதன்’ பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – அதிகாரி தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
இந்த கலந்துரையாடலில் தேர்வுகள், அதற்கு தயாராகும் முறைகள், தேர்வினால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிகழ்வின் போது தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை பிரதமர் எடுத்துரைப்பார். இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் MyGov என்ற அதிகார்பூர்வ தளத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த 25ம் தேதி முதல் பதிவு முறை தொடங்கியது. வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.