‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் விஜே சித்ராவை நினைத்து வெளியிட்ட பதிவு – சோகத்தில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லையாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த விஜே சித்ரா இறந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், சரவண விக்ரம் அவரை நினைத்து வெளியிட்ட பதிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜே சித்ரா:
சின்னத்திரையில் பல வருட போராட்டங்களுக்கு பின்னர் தனக்கென்று தனியாக ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் விஜே சித்ரா. இவர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த முல்லை கதாபாத்திரமாக தான் தற்போதும் நினைவில் நிற்கிறார். கடந்த வருடம் இதே நாளில் தான் விஜே சித்ரா தற்கொலை செய்து இறந்து விட்டார். இவர் இறந்து வருடம் கடந்தாலும், இவர் விட்டு சென்ற இடத்தை மக்கள் மனதில் யாராலும் நிரப்ப முடியாது. அந்த அளவிற்கு தனித்திறமையை அவர் வெளிப்படுத்தி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
திருமணத்தின் போது கண்கலங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை நக்ஷத்திரா – வைரலாகும் புகைப்படங்கள்!
சித்ரா கிட்டத்தட்ட 10 வருடங்களாக சின்னத்திரையில் வாய்ப்புகளுக்காக போராடி வந்தவர். தனக்கென்று கிடைத்த சிறு சிறு வாய்ப்புகளையும் மிகவும் நல்ல முறையில் மாற்றிக் கொண்டார். அந்த வகையில் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தான் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் பல சேனல்களிலும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். சித்ரா சக நடிகர்கள் அனைவரிடமும் மிகவும் நட்புடனும், பாசத்துடனும் பழக கூடியவர். இதனால் இவரின் மறைவு செய்தியை அனைவரும் மிகவும் துயரத்தில் ஆழ்ந்தனர்.
‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினிக்கு வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
சித்ரா மறைவை ஏற்றுக் கொள்ள முடியாமல் பலரும் தவித்து வந்தனர். இறுதியாக அவர் நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் சித்ராவை பற்றி பல நல்ல விஷயங்களையும் கூறிவந்தனர். தற்போது சித்ரா இறந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டதால், அவரின் நினைவாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் ஆக நடிக்கும் சரவண விக்ரம் சித்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அக்கா என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.