மீனாவால் குடும்பத்தில் உருவாகும் புதிய பிரச்சனை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையே நடைபெற்று வரும் நைட்டி பிரச்சனையை வைத்து அடுத்தகட்ட கதைக்களம் ஒளிபரப்பாக இருப்பதாக புதிய ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மக்களின் மனம் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது ஸ்வாரசியம் நிறைந்த கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. அந்த வகையில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை குடும்பத்துடன் சேர்த்து கொண்ட தனம் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பார்த்து, பார்த்து செய்து கொடுக்கிறார். இதை பார்க்கும் போது மீனாவுக்கு கடுப்பாக இருக்கிறது. தவிர ஐஸ்வர்யா நைட்டி போடும்போது தனம் அவரை ஒன்றும் சொல்லாதது, கூடுதலாக நைட்டி வாங்கிக்கொள்ள சொல்வது என அனைத்தும் ஐஸ்வர்யாவுக்கு சாதகமாக இருப்பதாகவே மீனா எண்ணிக்கொள்கிறார்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து திடீரென வெளியேறிய தாமரைச்செல்வி – ரசிகர்கள் ஷாக்!
அதனால் தன்னுடைய வீட்டில் சொல்லி ஒரு நைட்டி வாங்கி போடும் மீனா அனைவரையும் வெறுப்பற்ற முயற்சி செய்து வருகிறார். ஆனால் மீனாவின் முயற்சிகள் எல்லாம் வழக்கம் போல காமெடியாக மாறி விடுகிறது. இப்படி ஒரு வீட்டில் நைட்டி போடுவதால் இவ்வளவு பிரச்சனை இருக்குமா என்று சிந்திக்கும் அளவுக்கு பல எபிசோடுகளாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நைட்டி பிரச்சனையில் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பத்துடன் இணைந்த “பாக்கியலட்சுமி” ஸ்கூல் டீச்சர் – ரசிகர்கள் ஷாக்!
இந்த பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முதன் முதலாக மீனா நைட்டி போட்ட போது அப்படி செய்யக்கூடாது என தனம் எச்சரித்ததை வைத்து மீனா இப்போது புதிய பிரச்சனையை கிளப்பி விடுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த வீட்டில் ஜீவாவை தவிர மற்ற ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னாள் நீ இப்படி நைட்டி போடுவது சரி இல்லை என்று தனம் சொன்னதை வைத்து இப்போது மீனா ஒரு பிரளயத்தையே உண்டாக்குவது போல எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.