பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை, கதிர் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் – இன்றைய எபிசோட்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை, கதிர் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் - இன்றைய எபிசோட்!
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை, கதிர் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் - இன்றைய எபிசோட்!
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை, கதிர் ரசிகர்கள் எதிர்பார்த்த காட்சிகள் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையாக விஜே சித்ரா நடிக்கும் போது, அந்த கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் முல்லை கதாபாத்திரம் மாற்றத்திற்கு பின்னர் முல்லை, கதிரின் காதல் காட்சிகள் இன்றைய எபிசோடில் தான் ஒளிபரப்பப்பாக உள்ளது.

முல்லை கதிர் காதல்:

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை குடும்பத்துடன் பார்க்கும் ரசிகர்கள் அதிகம். காரணம் குடும்ப பாங்கான கதைக்களம், அண்ணன் & தம்பி பாசம். இந்த நிலையில் முல்லை கதிரின் காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் அதிகம். கண்ணன் ஐஸ்வர்யா காதல் காட்சிகளுக்கு கிடைக்காத வரவேற்ப்பு முல்லை கதிரின் காதல் காட்சிகளுக்கு கிடைக்கிறது. காரணம் வயதிற்கு ஏற்றார் போல பக்குவமான காதல் என்பதால். முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் – முல்லை ஜோடிக்கு தனியாக ஃபேன்ஸ் பட்டாளமே இருந்தது.

விஜய் டிவி பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் களமிறங்கும் டிக்டாக் பிரபலம் – பிரபல நடிகர் அறிவுரை!

ஆரம்பத்தில் குமரன் மற்றும் சித்ரா ஜோடிகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தனர். சித்ராவின் மறைவுக்கு பிறகு அவர் ரோலில் காவ்யா அறிவுமணி நடிக்க தொடங்கினார். அதன் பின்னர் முல்லை கதிர் காதல் காட்சிகள் காட்டப்படவில்லை. இந்நிலையில் பல மாதங்களுக்கு பின்னர் தற்போது கதிர், முல்லை காதல் காட்சிகள் இன்றைய எபிசோடில் காட்டப்பட்டுள்ளது. கண்ணன் காதல் திருமணம் செய்ததால் துக்கம் தாங்காமல் லட்சுமி அம்மாவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது.

அதை நினைத்து வீட்டில் இருப்பவர்கள் சரியாக சாப்பிடாமல் இருக்கின்றனர். முல்லையும், கதிரும் பார்வதி அம்மா உடல்நிலை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர். சாப்பிடாமல் தூங்க போன முல்லையை ஏன் சாப்பிடவில்லை? என்று கதிர் விசாரிக்க அதற்கு பதிலை முல்லை கதிர் மேலே திருப்புகிறார். “நீங்களும் தான் சரியா சாப்பிடவில்லை”ன்னு முல்லை சொல்ல, ஏற்கெனவே குண்டாகி விட்டதாக கதிர் நக்கல் செய்கிறார். உங்க அழகுக்கு ஈடு கொடுக்க வேண்டாமான்னு கதிர் சொல்ல, வெக்கபட்டு கொண்டு முல்லை தூங்க செல்கிறார். சாப்பிடாமல் தூங்கியதால் இரவில் பசியால் எழுந்து தண்ணீரை குடிக்கிறார்.

தொழிற்கல்வி படிப்புகள் வழங்கும் நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இதைப் பார்த்த கதிர், முல்லைக்கு ஏதாவது செஞ்சி கொடுக்கலாம் அப்படின்னு கிச்சனுக்கு போகிறார். கடைசியில் மூர்த்தி தனத்திற்கு முட்டை ஆம்லெட் போட்டு கொடுத்த மாதிரி செய்யலாம்ன்னு நினைச்சி முல்லைக்கு பெரிய சைஸ் ஆம்லெட் போட்டு கொடுக்கிறார். ஆனால் அது பயங்கர உப்பாக இருக்கிறது. ஆனால் தன் கணவர் ஆசையாக சமைத்து கொடுத்ததால் அதை முல்லை அன்போடு சாப்பிடுகிறார். இன்றைய எபிசோடில் முல்லை கதிர் காதல் காட்சிகள் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!