கண்ணன், ஐஸ்வர்யாவை வீட்டில் சேர்த்துக்கொள்ள ஒத்துக்கொள்ளும் மூர்த்தி – அடுத்த எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்காகவும் மீனா குடும்பத்தினரிடம் சண்டை போடுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்
விஜய் டிவியில் தற்போது பல வித கண்ணீர் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தான். இந்த சீரியலில் யாருமே எதிர்பாரா வண்ணம் லட்சுமி அம்மா மரணம் அடைந்து விடுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் கவலையில் இருக்கின்றனர். அம்மாவின் மரணத்திற்கு காரணம் கண்ணன் தான் என்று நினைக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா வரிசையில் ரோஜா சீரியல் – டாப் கமெண்ட்ஸ்!
இதனால் அவர் மேல் அனைவரும் கோபத்தில் இருக்கின்றனர். கண்ணன் வேலை விஷயமாக வெளியே வேறு சென்று விட்டதால் அம்மாவின் மரணம் குறித்து தெரிவிக்கமுடியாமல் போய் விடுகிறது. இப்படியாக இருக்க, கண்ணன் தனது அம்மாவின் இறுதி காரியங்களை தானே செய்து விடுகிறார். குடும்பத்தினர் அனைவரிடமும் சண்டையும் போடுகிறார். இனி வரும் நாட்களில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் வீட்டில் சேர்த்து கொள்ளலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இருந்து வருகின்றனர்.
இரட்டை குழந்தைகள் பற்றிய உண்மையை கூறி விடும் சௌந்தர்யா – அதிர்ச்சியில் பாரதி!
அப்போது மீனா அனைவரிடமும் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவருக்காகவும் சண்டை போடுகிறார். இந்த வீட்டில் இருவரையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று மூர்த்தி மற்றும் தனம் இருவரிடமும் கூறுகிறார். ஏற்கனவே கண்ணனை அம்மாவை கடைசியாக பார்க்க விடாமல் செய்த குற்ற உணர்வில் இருக்கும் மூர்த்தி இது குறித்து யோசனை செய்வதாக கூறுகிறார்.
Pls look into Repeated Dialogues .