இரட்டை குழந்தைகள் பற்றிய உண்மையை கூறி விடும் சௌந்தர்யா – அதிர்ச்சியில் பாரதி!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் காட்சிகள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. பாரதியிடம் சௌந்தர்யா கண்ணம்மாவின் இரட்டை குழந்தைகள் பற்றிய உண்மையை கூறி விடுகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல்
விஜய் டிவியில் எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தினை தக்க வைத்து இருக்கும் ஒரு சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா சீரியல் தான். இதில் தற்போது கண்ணம்மாவிற்கு தனது இரட்டை குழந்தைகள் பற்றி தெரிந்து விடுகிறது. அது குறித்து யாரிடம் கேட்டாலும் கண்ணம்மாவை அனைவரும் புறக்கணிக்கின்றனர். இதனால் கண்ணம்மா மனம் சோர்ந்து போய் விடுகிறார். இப்படியாக இருக்க, கண்ணம்மா வேறு வழி இல்லாமல் வெண்பாவிடம் தனது இரண்டாவது குழந்தை பற்றி விசாரிக்கிறார். வெண்பாவிற்கு உண்மை தெரியாது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் நிஜ அம்மாவுடன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் வாழ்த்து!
ஆனால், கண்ணம்மாவிடம் தனக்கு உண்மை தெரியும் என்பது போல காட்டி கொள்கிறார். அவரை நன்றாக பழியும் வாங்குகிறார். இந்த சூழலில் கண்ணம்மா சௌந்தர்யாவிடம் ஹேமா தான் தனது இரண்டாவது குழந்தையா? என்று கேட்கிறார். அப்போது பாரதியும் வந்து விடுகிறார். கண்ணம்மா மற்றும் பாரதி இருவருக்கும் வாக்குவாதம் வருகிறது. சௌந்தர்யா வேறு வழி இல்லாமல் கண்ணம்மாவை திட்டி அனுப்பி விடுகிறார். கண்ணம்மாவை அப்படி திட்டி அனுப்ப சௌந்தர்யாவிற்கு மனமே இல்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா வரிசையில் ரோஜா சீரியல் – டாப் கமெண்ட்ஸ்!
பின்னர், பாரதி கண்ணம்மா குறித்து கேட்கிறார். அதற்கு சௌந்தர்யா கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் என்றும், அதில் ஒரு குழந்தை காணாமல் போய் விட்டதால் தான் கண்ணம்மா தன்னிடம் வந்து கேட்கிறார் என்று சௌந்தர்யா கூறுகிறார். கண்ணம்மாவிற்கு தான் பிரசவம் பார்த்த போது ஒரு குழந்தை தானே பிறந்தது என்றும் அதே நாளில் தான் அம்மா ஹேமாவை வீட்டிற்கு எடுத்து வந்தார்கள் என்றும் யோசிக்கிறார். கூடிய விரைவில் பாரதிக்கு அனைத்து உண்மைகளும் தெரிய வரும் என்று எதிர்பார்க்கலாம்.
பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து வெவ்வேறு கோணங்களில் கொண்டு போகலாம் முடிக்க தேவையில்லை ஏனென்றால் இதில் நடிக்கும் நடிகர்கள் அத்தனை பேரும் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் பரீட்சித் தம்ஆகிவிட்டனர்.அதாவது செட்ஆகிவிட்டனர்.மற்சீரியல்இழுத்துகிட்டு போவதுபோல நீங்களும் இழுங்க.சீரியல் நல்லாயிருக்கு ஏன் முடியணும்??
It is high time to end the serial Bharati kannamma
ஒரு கேவலமான சீரியல். ரசிகர்கள் அறிவிலிகள். இந்த சீரியல் பிடிக்காமல் போனதற்கான காரணம் யூடியுபர் கயிறு திரித்து விடுதல். மற்றொரு காரணம் சீரியல் வழ வழ கொல கொல.