விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட் – வெளியான புகைப்படம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை மையமாக கொண்ட கதையை கொண்டுள்ளது. இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோட் குறித்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ் சீரியல்களில் TRP பட்டியலில் டாப் வரிசையில் இருக்கும் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலில் முக்கிய ரோலில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், காவ்யா, ஹேமா, சரவண விக்ரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் கடைசி தம்பி கண்ணன் காதல் திருமணம் செய்ததால் குடும்பத்தில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட அவ்வாறு கதை சென்று கொண்டிருக்கிறது.
விஜய் டிவி “குக் வித் கோமாளி” ஷிவாங்கிக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!
மேலும் கண்ணன் பணம் திருடியதாக மீனாவின் அப்பா சொல்ல, கண்ணன் மீது தப்பு இல்லை என மீனா நிரூபிக்கிறார். அதனால் மூர்த்திக்கு கண்ணன் மீது சிறிது அனுதாபம் வந்துள்ளது. அதனால் விரைவில் குடும்பத்துடன் கண்ணன் சேர வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் கதிர் கண்ணனிற்கு உதவி செய்வதால் முல்லை ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் மீது கோவமாக இருக்கிறார். தற்போது வரை இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இசைவாணி தனது திருமணத்தை மறைத்தது ஏன்? அவரே வெளியிட்ட வீடியோ!
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் தனம் அவரது அண்ணன் ஜெகா மற்றும் மூர்த்தி ஆகியோர் இருக்கின்றனர். மேலும் அவர்கள் அனைவரும் தோப்பில் இருப்பது போல அந்த புகைப்படத்தில் இருக்கிறது. அதனால் அடுத்த எபிசோட் வேறு இடத்தில் இருக்கும் என தெரிகிறது. இதனால் அடுத்த எபிசோடுகளில் புதுவிதமான கதை இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.