வீட்டு வாசலில் நின்ற கண்ணனை திட்டி அனுப்பிய தனத்தின் அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

0
வீட்டு வாசலில் நின்ற கண்ணனை திட்டி அனுப்பிய தனத்தின் அம்மா - இன்றைய
வீட்டு வாசலில் நின்ற கண்ணனை திட்டி அனுப்பிய தனத்தின் அம்மா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!!
வீட்டு வாசலில் நின்ற கண்ணனை திட்டி அனுப்பிய தனத்தின் அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் தனத்தின் வீட்டிற்கு செல்ல அங்கே தனத்தின் அம்மா அவனை திட்டிவிடுகிறார். கண்ணனை நாளை வெளி ஊருக்கு செல்லும்படி ஜனார்த்தனன் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் வீட்டு வாசலில் நின்று எட்டி பார்த்துக் கொண்டே இருக்கிறார். தனத்தின் அம்மா யாரோ எட்டி பார்க்கின்றனர் என சொல்கிறார். அப்போது முல்லை சென்று பார்க்க அங்கே கண்ணன் நிற்கிறார். அப்போது தனமும் வெளியே வந்து பார்க்க கண்ணனை பார்த்து அழுகிறார். கண்ணன் எப்படி இருக்கீங்க அண்ணி என கேட்க எதுவும் சொல்லாமல் தனம் அழுதுகொண்டே உள்ளே சென்றுவிடுகிறார்.

அப்போது தனத்தின் அம்மா அந்த கண்ணன் தான வந்திருக்கான் என வெளியே சென்று கண்டபடி திட்டுகிறார். தனத்தை நிம்மதியாக இருக்கவிடமாட்டியா, இவ்வளவு நேரம் நன்றாக இருந்தால் ஆனால் இனிமேல் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொள்வாள் என சொல்லி சத்தம் போடுகிறார். கண்ணன் அங்கிருந்து கிளம்புகிறான். கண்ணனும் ஐஸ்வர்யாவும் இரவு 10 மணிக்கு மேல் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர்.

இரட்டை குழந்தை பற்றி துளசியிடம் கேட்கும் கண்ணம்மா, துளசி சௌந்தர்யா மீது சந்தேகப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா”எபிசோட்!!

ஐஸ்வர்யா கணக்கு பார்க்க, என்ன இன்னும் கணக்கு பார்த்துக் கொண்டு இருக்க கிளம்பவில்லையா என கண்ணன் கேட்கிறார். இன்னைக்கு கணக்கை இன்றே முடித்துவிட்டால் நாளைக்கு சுலபமாக இருக்கும் என சொல்லி ஐஸ்வர்யா கணக்கு பார்க்கிறார். கண்ணன் பில் கவுண்டரில் இருக்கும் பொருள்களை எடுத்து வைக்கிறார். அப்போது ஜனார்த்தனன் அங்கே வர கிளம்பவில்லையா என கேட்கிறார். எல்லாம் முடிஞ்சது நீங்க கணக்கு பார்த்துவிட்டால் நன்றாக இருக்கும் என ஐஸ்வர்யா சொல்கிறார்.

கணக்கு பார்த்துவிட்டு கடையை மூடுகின்றனர். சூடம் பொருத்திவிட்டு கிளம்ப. ஜனார்த்தனன் கண்ணனை நாளை திருச்சி செல்லும்படி சொல்கிறார். காலை சென்றால் வருவதற்கு மாலை ஆகும் என சொல்கிறார். ஐஸ்வர்யா சரி என சொல்ல சொல்கிறார்.கண்ணனும் சரி என சொல்ல என் போனை கடைக்குள் வைத்துவிட்டேன் என சொல்கிறார். நாளைக்கு வேற ஊருக்கு போற எப்படி என கேட்க கண்ணன் என்ன செய்வது நாளைக்கு நீ எடுத்து வை என சொல்கிறார்.

மக்கள் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் – மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை!

அதன் பின்னர் மூர்த்தி கடைக்கு சென்றுவிட்டு வர, அம்மாவை பார்த்து சந்தோசப்படுகிறார். அவர் காலையில் இருந்து படுக்கவே இல்லை என சொல்ல, ஜீவா அம்மா அருகில் சென்று அமர்ந்து கொள்கிறார். நாளைக்கு அப்பாவின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் என சொல்ல வழக்கம் போல செய்துவிடலாம் என மூர்த்தி சொல்கிறார். லட்சுமி அம்மா இந்த வருடம் செய்ய முடியாது என சொல்ல ஏன் என கேட்கிறார் தனம். எப்போதும் நீ தான் செய்வ இப்போது உன்னால் செய்ய முடியாது என சொல்ல, முல்லை நான் செய்கிறேன் என சொல்கிறார்.

நாளைக்கு என்ன நடக்குமோ என லட்சுமி அம்மா சொல்ல, நாளைக்கு ஒன்றும் நடக்காது என தனம் சொல்கிறார். அனைவருக்கும் சாப்பாடு கொண்டு வந்து வைக்க, தனம் நான் அத்தைக்கு சாப்பாடு ஊட்டிவிடுறேன் என சொல்கிறார். ஆனால் லட்சுமி மூர்த்தி கையால் சாப்பிட வேண்டும் என கேட்கிறார். உடனே மூர்த்தி சாப்பாடு போட்டு ஊட்டிவிடுகிறார். அப்போது கதிரும் ஜீவாவும் அம்மா வேற மாதிரி இன்னைக்கு இருக்காங்க என சொல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!