மக்கள் பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் – மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை!
நாட்டில் அடுத்தடுத்து வர இருக்கும் பண்டிகைகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
வழிகாட்டுதல்கள் வெளியீடு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் கடந்த மாதம் முதல் குறைந்து வந்தது. இருப்பினும், கேரளா மாநிலத்தில் மட்டும் இன்னும் தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளது. இதனால் கட்டுப்பாட்டு பணிகள் முறையாக அமலில் இருந்து வருகிறது. தற்போது செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வர உள்ளது. பண்டிகையை பொது வெளியில் கொண்டாட அனைத்து மாநில அரசுகளும் தடை விதித்துள்ளது. இதனால் பெரும் சர்ச்சைகளும் நிலவி வருகிறது.
நாட்டின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளனர். கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை இன்னும் முழுமையாக ஒழியவில்லை. தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகிறது. அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து மத்திய நிதி அயோக் உறுப்பினர் வி.கே.பால் அவர்கள் பேசினார். அப்போது, நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த கொரோனா சூழலில் பண்டிகைகளை வீட்டில் இருந்தே கொண்டாட வேண்டும். மக்கள் இதனை அறிவுரையாக அல்லது எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம். அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாட்டில் 35 மாவட்டங்களில் கொரோனா பரவும் விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் சன்டிவி ‘ரோஜா’ வரை – ஹிட் சீரியல்களின் டாப் கமெண்ட்ஸ்கள்!
தீபாவளி வரை பண்டிகைகளை வழிகாட்டு நெறிமுறைகளுடன் கொண்டாட வேண்டும். பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைத்து இனி வரும் பண்டிகைகளை வீடுகளில் இருந்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.