கயலின் காது குத்து நிகழ்ச்சிக்கு தயாராகும் குடும்பத்தினர், தாய்மாமன் முறைக்கு வரும் தனத்தின் அண்ணா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மூர்த்தி ஹாலில் படுப்பதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் கயலின் மொட்டை போடும் நிகழ்ச்சி எங்க குலதெய்வம் கோவிலில் நடக்க வேண்டும் என மீனாவின் அப்பா சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் மூர்த்தி ஹாலில் தூங்க கதிர் மற்றும் ஜீவா வந்து வருத்தப்படுகின்றனர். இங்கே எப்படி தூங்குவீங்க மழை பெய்தால் சாரல் அடிக்கும், கொசு வேற அதிகமாக கடிக்கும் என ஜீவா சொல்ல, எல்லாம் இல்லை நன்றாக தான் இருக்கிறது. ரூமில் படுத்தலும் நாங்க கிழே தான் படுக்க போகிறோம் என சொல்கிறார். கதிர் வருத்தப்பட இன்னும் கொஞ்ச நாள் தான் அப்பறம் பெரிய வீட்டிற்கு நாம போயிருவோம் என சொல்கிறார்.
பின் மூர்த்தி குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க தனம் வந்து காபி கொடுக்கிறார். அந்த நேரம் மீனாவின் அப்பா வருகிறார். நாளைக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி எங்களது குலதெய்வ கோவிலில் நடக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் என சொல்ல, நான் எல்லா ஏற்படும் செய்துவிட்டேன் என மூர்த்தி சொல்கிறார். நான் ஆசை படுவதாக தான் சொன்னேன். மீனாவிற்கு நான் எதுவும் செய்யவில்லை. கல்யாணம் நடத்தவில்லை, வளைகாப்பு நடத்தவில்லை, பிறந்தநாளும் என்னை நடத்தவிடவில்லை, அதனால் இதை நான் செய்ய வேண்டும் என சொல்கிறார்.
கண்ணம்மா வீட்டிற்கு சென்ற லட்சுமி, பாரதியை பார்த்து விடுவாளா? இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
மூர்த்தி எதுவும் பேசாமல் இருக்க, சரி கெடா விருந்து சாப்பாடு நான் ஏற்பாடு செய்கிறேன் என சொல்ல, மூர்த்தி சரி என சொல்கிறார். முல்லை துணி துவைத்துக் கொண்டிருக்க, கதிர் வந்து பேசுகிறார். அப்போது கயல் பாப்பா பாவம் அவளுக்கு காது குத்த வேண்டுமா வலிக்கும் நம்ம குழந்தைக்கு எல்லாம் காது குத்த கூடாது என கதிர் சொல்கிறார். எனக்கு எல்லாம் 4 தடவை காது குத்தினார்கள் என முல்லை கதை ஒன்றை சொல்ல, அவங்களுக்கு நிறைய குழந்தைகள் வந்தது போல கனவு வந்ததாக கதிரிடம் முல்லை சொல்கிறார்.
அடுத்த வருஷம் அண்ணி பையனுக்கு காது குத்துவோம் அப்பறம் நம்ம புள்ளைக்கு காது குத்துவோம் என கதிர் சொல்கிறார். முதலில் பொண்ணு வேண்டுமா என முல்லை கேட்க ஆமாம் அதற்கு அப்பறம் பையன் என சொல்கிறார். தனத்தின் அண்ணன் அண்ணி வந்து பாண்டியனை கொஞ்சிக் கொண்டிருக்க கஸ்தூரி அவனை தொட்டிலில் போடுறேன் என கேட்கிறார். பின் கயலுக்கு மொட்டை போட்டு காது குத்துறோம் என சொல்ல, பிறந்தநாளுக்கு முன்னாடியே மொட்டை போட்டிருக்க வேண்டும் என சொல்ல, கயலுக்கு நிறைய முடி வளர்ந்துவிட்டது என சொல்கிறார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ் – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தனம் தனது அண்ணனை என்னை போல நினைத்து மீனாவின் குழந்தைக்கு நீ முறை செய்ய வேண்டும் என சொல்ல, ஜெகா சரி என சொல்கிறார். கஸ்தூரி உன் புள்ளைக்கு நாங்க செய்வோம் ஆனால் மீனாவின் குழந்தைக்கு செய்ய முடியுமா என கேட்கிறார். செலவு எல்லாம் செய்ய வேண்டாம் நாங்க பார்த்துக் கொள்கிறோம் ஆனால் தாய்மாமா முறைக்கு நீ வர வேண்டும் என ஜெகா சொல்கிறார். தனத்திற்கு செய்யலாம் முல்லைக்கு செய்யலாம் ஆனால் மீனாவின் அப்பா நிறைய பணம் வைத்திருக்கிறார் அவர் செய்யட்டும் என சொல்ல, அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என தனம் சொல்கிறார். பின் முல்லை எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள போகிறாய் என கேட்க சீக்கிரமாக பெற்று கொள்வாள் என தனம் சொல்கிறார்