தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ் – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு வழங்கி வருகிறது. மேலும் தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு பற்றி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொங்கல் போனஸ்
தமிழகத்தில் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பரிசு தொகுப்பை வருகிற ஜனவரி 3ம் தேதி முதல் வழங்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக அகவிலைப்படி உயர்வு வருகிற புத்தாண்டு தினத்தன்று அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் ஓமிக்ரான் – 45 பேருக்கு தொற்று உறுதி! சுகாதாரத்துறை எச்சரிக்கை!
இதனை கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழக சட்டமன்ற பேரவையில் விதி 110-கீழ் தெரிவித்திருந்தது. இதையடுத்து ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி தருவதாக இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 14 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டிச.31ம் தேதிக்கு பிறகு இரவு ஊரடங்கு அமல்? தீவிர ஆலோசனை! அரசின் முடிவு என்ன?
இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 8,724 கோடி செலவு ஏற்படும். மேலும் தற்போது ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கவும், ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கவும் மேலும் சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 1000 ரூபாய்யை பொங்கல் பரிசாக வழங்கவும் அத்துடன் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கவும் முதல்வர் இன்று ஆணையிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 169.56 கோடி செலவு ஏற்படும். தற்போது அரசுக்கு நிதி நெருக்கடி நிலை ஏற்பட்ட போதிலும் அரசு ஊழியர்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது