கண்ணன் வந்த சந்தோசத்தை வெளியே காட்டாமல் இருக்கும் மூர்த்தி- இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கண்ணன் வந்த சந்தோசத்தை வெளியே காட்டாமல் இருக்கும் மூர்த்தி - இன்றைய
கண்ணன் வந்த சந்தோசத்தை வெளியே காட்டாமல் இருக்கும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கண்ணன் வந்த சந்தோசத்தை வெளியே காட்டாமல் இருக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் எடுத்த முடிவினால் கதிர் ஜீவா என்ன நினைக்கிறார்கள் என கேட்கிறார். அண்ணன் எடுத்த முடிவை போல நீங்க எடுத்த முடிவும் எங்களுக்கு முக்கியம் தான் என ஜீவா சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், தனம் கண்ணனை அழைத்து வந்ததை அடுத்து ஜீவா கதிர் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கிறார். எங்களுக்கு என்ன பிரச்சனை வர போகிறது. அண்ணன் போல தான் நீங்களும் நீங்க எடுத்த முடிவு சரியாக தான் இருக்கும் என ஜீவா சொல்கிறார். மூர்த்தி வெளியே நின்று வண்டியில் சத்தம் போட இன்னும் அண்ணன் கிளம்பவில்லை போல என ஜீவா கிளம்புகிறார். வண்டியில் போகும் போது அண்ணி எடுத்த முடிவு சரியாக தான் இருக்கும். அவன் அண்ணி வரும் போது சின்ன பையனாக இருந்தான் அதனால் தான் இப்படி கஷ்டப்படும் போது அண்ணியால் தாங்க முடியவில்லை என சொல்கிறார்.

கண்ணம்மாவுடன் ஆறு மாதம் சேர்ந்து வாழமாட்டேன் என சொல்லும் பாரதி, புதிதாக வீட்டின் அருகே குடியேறும் வக்கீல் அக்கா- இன்றைய எபிசோட்!

நீங்க கோவப்படாதீங்க அண்ணி மீது என சொல்ல, மூர்த்தி சும்மா வா எதையாவது பேசாமல் என சொல்லி கண்ணன் வந்த சந்தோஷத்தில் சிரித்து கொண்டே வருகிறார். அதை பார்த்து மீனா சதொசப்படுகிறார். பின் கண்ணன் வீட்டில் இருக்க அண்ணி ஏதாவது பிரச்சனை ஆகும், கண்டிப்பா இங்கே இருக்க வேண்டுமா என கேட்கிறார். அப்போது தனம் இது உன் வீடு நீ இங்கே இருக்க எல்லா உரிமையும் இருக்கிறது என சொல்கிறார். ஐஸ்வர்யா நான் உண்மையாகவே இங்கே தான் இருக்கேனா என கேட்க, முல்லை கிள்ளி காட்டுகிறார். பழைய கோவத்தை எல்லாம் மனசில் வைத்து கிள்ளியது போல இருக்கிறதே என சொல்ல ஆமாம் நிறைய கோவம் இருக்கிறது என சொல்கிறார்.

கண்ணன் நான் இங்கே இருந்தால் பிரச்சனை ஆகும் என சொல்ல, அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என தனம் சொல்கிறார். முல்லை சமைக்க போக மீனா வந்து தனம் எடுத்தா அந்த முடிவைமாற்றவே முடியாது ஆனால் இந்த வீட்டில் நமக்கு எந்த உரிமையும் இல்லை என சொல்கிறார். எத்தனை வருடம் ஆனாலும் நாம தனம் அக்காவா ஆகவே முடியாது என சொல்ல, நான் கயல் பிறந்தநாளை எப்படி கொண்டாட வேண்டும் என நினைத்தேன் ஆனால் அவங்க இஷ்டப்படி தான் நடக்க போகுது. ஐஸ்வர்யா வேற வந்துருக்கா அவள் என்ன செய்ய போகிறாளோ என நினைக்கிறார்கள்.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

அதை கேட்டு ஐஸ்வர்யா வர என்னை பற்றி ஏன் பேசுனீங்க என கேட்கிறார். உன்னை பற்றி நான் பேசவில்லை நீ எதையாவது நினைக்காதே என சொல்கிறார். பின் முல்லை கதிரிற்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க, என்ன இப்போ வந்துருக்க என கேட்கிறார். நீங்க சண்டைக்கு போனீங்களா இல்லையா என பார்க்க வேண்டும் என சொல்கிறார். பின் முல்லை சாப்பாடு கொடுத்துவிட்டு கதிரிடம் சந்தோசமாக பேசிக்கொண்டிருக்கிறார்.

கண்ணன் தனம் மீனாவை கிண்டல் செய்து கொண்டிருக்க ஐஸ்வர்யா பற்றி கேட்கிறார். அவள் சத்தமாக பேசுகிறாள் அவள் எப்படி என கேட்க, அவள் ரொம்ப நல்ல பொண்ணு என கண்ணன் சொல்கிறார். எங்கே ஐஸ்வர்யாவை காணவில்லை என மீனா கேட்க, ஐஸ்வர்யா அந்த வீட்டில் இருக்கும் பொருள்களை எல்லாம் எடுத்துக் கொண்டு வருகிறார். என்ன அவசரம் என கேட்க, யாரு வாடகை கொடுப்பது என ஐஸ்வர்யா சொல்கிறார். பின் தனம் பொறுமையாக இரு எல்லாரும் வந்ததும் எடுக்க சொல்லலாம் என சொல்ல, நீங்க இப்போது இருக்க சொல்றீங்க திடீரென போக சொன்னால் நான் என்ன செய்வது என கேட்க தனம் வருத்தப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!