ஜீவா உதவி செய்ததை கண்ணனிடம் சொல்லும் நண்பன், மூச்சு பேச்சில்லாமல் இருக்கும் பார்வதி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்தை திட்டியதற்காக மூர்த்தியிடம் கதிர் கோபப்படுகிறார். மூர்த்தி இனிமேல் திட்டமாட்டான் ரொம்ப பாசம் தான் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.மீனா தனத்திடம் கயலுக்கு காசு சேர்த்து வைப்பது பற்றி கேட்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம் கண்ணனை பற்றி பேசியதற்கு கதிர் சண்டை போடுகிறார். உங்களுக்கு கோவம் இருந்தால் என்னை கூப்பிட்டு திட்டுங்க எதற்கு அண்ணியை திட்டுறீங்க என கதிர் கேட்கிறார். ஆமாம் கதிர் நல்ல கேளு என தனம் சந்தோசத்தில் இருக்கிறார். பின்னர் கதிரும் முல்லையும் ரூம் உள்ளே சென்று அண்ணனிடம் ரொம்ப பேசிட்டோமோ என கேட்கிறார். ஆமாம் என முல்லை சொல்ல, அப்படியா அப்போ அவங்க அண்ணியிடம் அவ்வளவு சத்தமாக பேசலாமா என கதிர் கேட்கிறார்.
நீங்களும் தான் என்னை பேசிருக்கீங்க என சொல்ல, அதுக்காக அண்ணி மாசமாக இருக்கும் போது பேசலாமா என கேட்கிறார். அண்ணி மருத்துவமனை செல்லும் போது கண்ணனை பார்த்திருக்கார். அப்போது அவன் பொருள்கள் வாங்கி வந்திருக்கிறான். அவனை பார்த்து அண்ணி அண்ணனிடம் பேசிருப்பாங்க அதுக்கு இப்படி கத்துவாரா என கேட்கின்றார்.
மேலும் மளிகை நம்ம கடையில் இருந்து தான் போயிருக்கு என சொல்ல அப்படியா எனக்கு எதுவும் தெரியாது என முல்லை சொல்கிறார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாதபோது முல்லை கதிருக்கு இடையே நடந்த சந்தோசமான நிகழ்வுகளை பற்றி பேசிக் கொள்கின்றனர். மறுநாள் காலையில் மீனா தனத்திடம் உண்டியல் பற்றி கேட்கிறார். கயலுக்காக சேர்த்து வைத்துள்ளேன் தினமும் மாமா கொடுக்கிற காசில் 200 ரூபாய் போடுவேன் என சொல்கிறார்.
கொரோனா தடுப்பு பணியாக மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் – கோவை ஆட்சியர் உத்தரவு!
மீனா, ஜீவாவும் எனக்கு காசு கொடுத்தால் நானும் சேர்த்து வைப்பேன் என சொல்கிறார்.நீ அதெல்லாம் பண்ணமாட்ட என சொல்கிறார். பின்னர் கண்ணனை பார்க்க அவரது நண்பர் வருகிறார். இனிமேல் கல்லூரிக்கு வருவீர்களா என கேட்க கண்ணனும் ஐஸ்வர்யாவும் நீ போ என சண்டை போடுகின்றனர். கண்ணன் அவன் நண்பனிடம் மளிகை பொருள் அனுப்பியது என் அண்ணன் தான் என சொல்கிறார்.
பின்னர் கண்ணனின் நண்பன் உனக்கு 4000 ருபாய் கொடுத்ததும் உன் ஜீவா அண்ணன் தான். அடிக்கடி எனக்கு போன் செய்து நீ எப்படி இருக்கிறாய் என கேட்பார் என சொல்ல கண்ணன் அதை நினைத்து வருத்தப்படுகிறார். பின்னர் முல்லை லட்சுமி அம்மாவை எழுப்ப செல்ல அவர் அங்கே மூச்சு பேச்சில்லாமல் இருக்கிறார். அவர் வீட்டில் இருக்கும் அனைவரையும் கத்தி அழைக்கிறார். மூர்த்தி கதிர் ஜீவா வந்து அம்மா அம்மா என்று எழுப்புகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.