இடிக்கப்படும் “பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்”? ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் – அடுத்து வரும் எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது கடை இன்னும் 2 நாட்களில் திறக்க இருக்கும் நிலையில் கண்ணனை அடித்தவன் பழி வாங்க நினைத்து கடைக்கு சீல் வைக்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சூப்பர் ஸ்டோர் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கிறது. குடும்பமே கடை திறப்பு விழாவை நினைத்து சந்தோசமாக இருக்கின்றனர். மேலும் சொந்தங்களை அழைக்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திடீரென அலுவலர் ஒருவர் வந்து கடையை சீல் வைக்க வேண்டும் என சொல்ல என்ன காரணம் என ஜீவாவும் கதிரும் கேட்கின்றனர். ஆனால் அது பற்றி எதுவும் சொல்லாத அவர்கள் கடையை அடைத்து சீல் வைக்கின்றனர்.
இந்திய அணியில் இருந்து நான் விலக வேண்டுமா? ரோஹித் சர்மா காட்டம்!
இந்நிலையில் அலுவலக வாசலில் மூர்த்தி ஜீவா கதிர் நீண்டநேரமாக காத்திருக்க ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எதனால் இப்படி எல்லாம் நடக்கிறது என தெரியாமல் குடும்பமே வருத்தத்தில் இருக்கிறது. கண்ணனை கடை சென்று திரும்ப வழியில் அவனை அடித்தவன் பார்க்கிறார். என் அப்பா தான் அந்த அலுவலர் உன் அண்ணன் என்னை அடித்ததால் பழி வாங்க தான் இதை செய்தேன் என சொல்கிறார். ஆனால் கண்ணன் இதை வீட்டில் சொல்லாமல் மறைக்க ஐஸ்வர்யா அதெல்லாம் தவறு என சொல்கிறார்.
பிப். 14 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடக்கம் – மாநில அரசு உத்தரவு!
ஐஸ்வர்யா உண்மையை எல்லாரிடமும் சொல்வாரா குடும்பம் என்ன செய்ய போகிறது என்பதே அடுத்து வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது. தற்போது அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஐஸ்வர்யா உண்மையை குடும்பத்திடம் சொல்கிறார். மேலும் அந்த அலுவலர் கடையை மூடி சீல் வைக்க இருப்பதாக சொல்லி மிரட்டுகின்றனர். அதனால் குடும்பமே ரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் திறக்கப்படுமா? குடும்பத்திற்கு நியாயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.